இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் சதாம் உசேனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சதாம் உசேனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கோவை சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் கொலையாளிகளுக்கு உதவியதாக அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி கருமத்தம்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சதாம் உசேனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் கோவை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகரன் சதாம் உசேனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் காவலின் போது 2 நாட்கள் சதாமை அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசவும் அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

இது குறித்து பேசிய சதாம் தரப்பு வழக்கறிஞர் ப.ப.மோகன், இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது எனவும் விசாரணை தேவையில்லை என தங்கள் தரப்பில் வாதிட்டதாகவும், இருப்பினும் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து சதாமை போலீசார் தனியிடத்தில் வைத்து விசாரிக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...