திருச்சி ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 20 ரூபாயாக, உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி, பல்வேறு மாநில, மாவட்ட மக்கள் வந்து செல்வதற்கு சுலபமாக இருப்பதால், திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு, வருகைதரும், வெளிமாவட்ட, மாநில மக்கள், திருச்சி வழியாகத்தான் கடந்து செல்வது வழக்கம். அதோடு, வேளாங்கண்ணி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, கும்பகோணம் என ஆன்மிக பயணங்களுக்கும் திருச்சி வழியே செல்ல வேண்டும் என்பதால், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும்.
இந்நிலையில், தற்போது பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வு, திருச்சி ரயில் நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ரயில்வே துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஈரோடு ரயில்வே இருபாலர் உயர்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது: தெற்கு ரயில்வே கோட்டத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் உத்தேசம் இல்லை என்றும், தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி ரயில் நிலையத்தில் மட்டுமே ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு, அவர் கூறினார்.