வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி ரயில் எண் 06085: ஆகஸ்ட் 30 செப்டம்பர் 4, 6 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06086: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 5, 7 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். 

சென்னை சென்ட்ரல் - வேளாங்கண்ணி ரயில் எண் 06087: ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06088: ஆகஸ்ட் 30, செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

ரயில் எண் 06091: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06092: செப்டம்பர் 1, 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். 

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் எண் 06016 : ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06015: செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும். இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

நாகர்கோவில் டவுன் -வேளாங்கண்ணி ரயில் எண் 06090: ஆகஸ்ட் 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் டவுனில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். 

ரயில் எண் 06089: ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் டவுன் வந்தடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் - நாகப்பட்டினம் ரயில் எண் 06093: செப்டம்பர் 7 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

வேளாங்கண்ணி - மும்பை பாந்த்ரா முனையம் ரயில் எண் 09028: ஆகஸ்ட் 29 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 9.45 மணிக்குப் புறப்பட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு மும்பை பாந்த்ரா முனையம் சென்றடையும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ரேணிகுண்டா, கொடுரூ, ராஜம்பேட்டை, கடப்பா, எரகுண்டலா, முத்தனரு, தாதிபத்ரி, கூட்டி, குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூர், யாத்கிர், வாதி, குல்பர்கா, சோலாபூர், தாந்த், புணே, லோனாவாலா, கல்யாண், வசாய் சாலை, போரிவலி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...