கோவை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் முன்னணி தொழில் நிறுவனங்களைக் கொண்டு படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை காருண்யா மேனேஜ்மென்ட் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதால் 8-வது முதல் பட்டயப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் தங்களது பையோ டேட்டா, கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதிச் சான்று (அசல் மற்றும் நகல்) மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயணடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.