மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட வனத்துறையினர், தன்னார்வலர் உறுப்பினர்கள் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட வடக்கு வனப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 8 வயது மதிக்கத்தக்க காட்டு மாடு ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. தொடர்ந்து, அந்த மாடு மனிதர்களை தாக்கும் வகையில் செய்வதறியாது அங்கும் இங்கும் என நகரம் முழுவதும் சுற்றித்திரிந்தது.
இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரேஞ்சர் எஸ்.செல்வராஜ், காட்டு வனவிலங்கு குழு உறுப்பினர்கள், வனவிலங்கு ஆர்வலர்களுடன் இணைந்து காட்டு மாட்டை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.
இருப்பினும், அந்த மாடு மல்லேஷ்வரன் கோவில், குட்டையூர், காந்தி நகர், இரண்டாம் பாலம், இரயில்வே லைன், அயர்பாடி, மடோனா பள்ளி மற்றும் குரும்பனூர் ஆகிய இடங்களில் சுற்றித் திரிந்தது.
இதைத்தொடர்ந்து, வனத்துறையினரின் வாகனங்கள் உதவியுடன், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அந்த காட்டு மாடு எவ்வித பாதிப்பும் இன்றி சுமார் 10.30 மணியளவில் காட்டிற்கு விரட்டப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 8 வயது மதிக்கத்தக்க காட்டு மாடு ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. தொடர்ந்து, அந்த மாடு மனிதர்களை தாக்கும் வகையில் செய்வதறியாது அங்கும் இங்கும் என நகரம் முழுவதும் சுற்றித்திரிந்தது.
இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரேஞ்சர் எஸ்.செல்வராஜ், காட்டு வனவிலங்கு குழு உறுப்பினர்கள், வனவிலங்கு ஆர்வலர்களுடன் இணைந்து காட்டு மாட்டை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.
இருப்பினும், அந்த மாடு மல்லேஷ்வரன் கோவில், குட்டையூர், காந்தி நகர், இரண்டாம் பாலம், இரயில்வே லைன், அயர்பாடி, மடோனா பள்ளி மற்றும் குரும்பனூர் ஆகிய இடங்களில் சுற்றித் திரிந்தது.
இதைத்தொடர்ந்து, வனத்துறையினரின் வாகனங்கள் உதவியுடன், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அந்த காட்டு மாடு எவ்வித பாதிப்பும் இன்றி சுமார் 10.30 மணியளவில் காட்டிற்கு விரட்டப்பட்டது.