நீலகிரி மாவட்டம், பைக்காரா மற்றும் சிங்காரா நீர்மின் நிலையங்களை இன்று (ஜூலை 3) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு (2016-2018) தலைவர் எஸ்.முத்தையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி பைக்காரா மற்றும் சிங்காரா நீர் மின் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழத் தலைவர் எஸ்.முத்தையா, அதன் செயல்முறைகளை கேட்டறிந்தார்.

பைக்காரா இறுதி நீர்மின் நிலையம் 150 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்டது. இதற்கு நீராதாரம் கிளன்மார்கன் அணையிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இதன் நீர்பிடிப்பு பரப்பானது 154.23 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் இயக்க உரம் 1039 மீ. இந்நீர்மின் நிலையம் துவக்கப்பட்டு ஆண்டு 2005. ஒரு வருடத்திற்கு சராசரியாக 265.94 மில்லியன் யூனிட் கிடைக்கப்பெறுகிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 584 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சிங்காரா நீர்மின் நிலையத்தை ஆய்வு செய்து பார்வையிட்ட எஸ்.முத்தையா அதன் செயல்முறைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கர பாண்டியன், உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி பைக்காரா மற்றும் சிங்காரா நீர் மின் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழத் தலைவர் எஸ்.முத்தையா, அதன் செயல்முறைகளை கேட்டறிந்தார்.

பைக்காரா இறுதி நீர்மின் நிலையம் 150 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்டது. இதற்கு நீராதாரம் கிளன்மார்கன் அணையிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இதன் நீர்பிடிப்பு பரப்பானது 154.23 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் இயக்க உரம் 1039 மீ. இந்நீர்மின் நிலையம் துவக்கப்பட்டு ஆண்டு 2005. ஒரு வருடத்திற்கு சராசரியாக 265.94 மில்லியன் யூனிட் கிடைக்கப்பெறுகிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 584 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சிங்காரா நீர்மின் நிலையத்தை ஆய்வு செய்து பார்வையிட்ட எஸ்.முத்தையா அதன் செயல்முறைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கர பாண்டியன், உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.