கோவை மாநகராட்சியில் 50 மைக்ரான் அளவு குறைவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு தவிர்ப்பது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக உள்ள பைகளை பயன்படுத்துவது குறித்த கலந்தாலோசனை மற்றும் உபவிதிகள் உருவாக்குவதற்கான கூட்டம் கோவை மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் குப்பைகள் 100 சதவிகிதம் தரம் பிரித்து கையாள்வது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சண்முகம், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (பொ) கே.சரவணக்குமார், உதவி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், உணவக சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் குப்பைகள் 100 சதவிகிதம் தரம் பிரித்து கையாள்வது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சண்முகம், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (பொ) கே.சரவணக்குமார், உதவி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், உணவக சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.