ஆடி பெருக்கு, ஆடி மாதத்தின் 18-வது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த திருநாளன்று நீர் நிலைகள் அருகே வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு வழிபாட்டின் போது பொதுமக்களுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படாத வகையில் புனித நதிகளுக்கும், குளங்களுக்கும் அருகே கட்டடைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவிரி நதி மற்றும் அதன் கிளைகளான பவானி மற்றும் நொய்யல் ஆகியவற்றில் உள்ள அனைத்து ஆலய புனித ஆறுகளிலும் இந்த விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.

ஆடி 18 இந்த புனித நாளன்று, பாரம்பரிய முறையில் புதிதாக திருமணமானவர்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்வினை மேற்கொள்ள அம்மனுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள். ஒரு பாரம்பரிய நடைமுறையில், அந்த தம்பதியினர் கூட்டாக தங்கள் திருமண மாலைகளை புனிதமான ஆறுகள் அல்லது குளங்களில், கோவில்களில் விட்டு விடுகின்றனர்.

சிலர், தங்களது முன்னோர்கள், உயிரிழந்த குடும்பத்தினர்களை வழிபடும் வகையிலும் கோவில் ஆறு, குளங்களில் இன்றைய தினம் வழிபடுவர். அப்போது, இலை மீது முறுக்கு, லட்டு உள்ளிட்ட காரம் மற்றும் இனிப்புகளை படையலிட்டு சிவப்பு நிற துணியுடன் கூடிய கருப்பு வளையல்கள் ஆகியவற்றை உயிரிழந்தோர் நினைவாக நதிநீரில் விட்டுச் செல்வர்.


ஆடி 18 இந்த புனித நாளன்று, பாரம்பரிய முறையில் புதிதாக திருமணமானவர்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்வினை மேற்கொள்ள அம்மனுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள். ஒரு பாரம்பரிய நடைமுறையில், அந்த தம்பதியினர் கூட்டாக தங்கள் திருமண மாலைகளை புனிதமான ஆறுகள் அல்லது குளங்களில், கோவில்களில் விட்டு விடுகின்றனர்.

சிலர், தங்களது முன்னோர்கள், உயிரிழந்த குடும்பத்தினர்களை வழிபடும் வகையிலும் கோவில் ஆறு, குளங்களில் இன்றைய தினம் வழிபடுவர். அப்போது, இலை மீது முறுக்கு, லட்டு உள்ளிட்ட காரம் மற்றும் இனிப்புகளை படையலிட்டு சிவப்பு நிற துணியுடன் கூடிய கருப்பு வளையல்கள் ஆகியவற்றை உயிரிழந்தோர் நினைவாக நதிநீரில் விட்டுச் செல்வர்.
