தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் எம்.எல்.ஏ எஸ்.முத்தையா தலைமையில் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் எம்.எல்.ஏ எஸ்.முத்தையா தலைமையில் கோவை சுங்கம்,  தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பணிமனை, ஆவின் பாலகம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப பூங்கா கூட்டரங்கில் வேளாண்மைத்துறை, தாட்கோ, போக்குவரத்துத்துறை மற்றும் தொழில்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் எம்.எல்.ஏ எஸ்.முத்தையா தலைமையில் நடைபெற்றது.

பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு சுங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கு பணிமனையிலுள்ள உணவகத்தில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? என்றும் பேருந்துகளை இயக்கும்போது எந்த விதமான விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



25-ஆண்டுகள் விபத்துகளே இல்லாமல் பேருந்துகளை இயக்குகின்ற ஒட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கி தமிழ்நாடு அரசு  ஊக்குவிக்கப்படுகின்றது. மேலும் பேருந்துகளை விபத்தில்லாமல் பாதுகாப்பாக இயக்க ஒட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஒட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர்களிடம் தனித்தனியே கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பணியில் மன நிறைவுடன் இருப்பதாக தெரிவித்தனர் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தெரிவித்தார்.

பின்னர், பேரூர், பச்சாப்பாளையம் ஆவின் பால் நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 2.60லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது.  இதில் 1.52லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகின்றது. 30 ஆயிரம் லிட்டர் பால் கேரள மாநிலத்திற்கு விநியோகம் செய்யப்படுகின்றது. மேலும் சுமார் 1லட்சம் லிட்டர் பாலில் பால் பவுடர், வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பால்பொருட்கள் ஆவின் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.

மேலும், தகவல் தொழில்நுட்ப பூங்காவானது சுமார் 17.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 70 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் சுமார் எட்டாயிரம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் வளர்ச்சியடைய செய்து வேலைவாய்பினை பெருக்கி மென்பொருள் உற்பத்தியை அதிகரிக்க செய்து கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.முத்தையா தெரிவித்தார்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்ப பூங்கா மேலாண் இயக்குநர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் (பொ) கே.பாண்டி, பொது மேலாளர் இ.கோவிந்தராஜ், வேளாண் உதவி இயக்குநர் (விற்பனை) மோகனசுந்தரம், தாட்கோ பொது மேலாளர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் (பொ) ராஜ்குமார் மற்றும் பொது நிறுவனங்கள் குழு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...