கடலில் வழி தவறுகின்ற மீனவர்கள் உள்பட படகுகள், கப்பல்கள் உள்ளிட்ட 64 வகையான பொருட்களை கண்டுபிடிக்க SARAT என்ற பெயரில் மொபைல் ஆப்பை கடல் தகவல் சேவைகளின் இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த SARAT மொபைல் ஆப் மூலமாக கடலில் தத்தளிப்பவர்கள், காணாமல் போனவர்கள் ஆகியோர் உள்பட பல்வேறு வகையான 64 பொருட்களை மிகவும் எளிதாக கண்டுபிடிக்க முடியும் வகையில் சூப்பர் கணினிகளின் உதவியை கொண்டு ஹைதராபாத் கடல் சேவை மையத்துக்கான இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.
கடலில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மீனவர்கள், செல்போனில் நெட்வொர்க் கிடைத்தால், SARAT-ஐப் பயன்படுத்த முடியும். இது குறிப்பாக மீனவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேடுதல் பணியில் ஈடுபடும்போது, காணாமல் போன பொருள், மனிதர்கள் கடைசியாக எங்கு இருந்தார்கள் என்ற விவரத்தை ஜிபிஎஸ் உதவியுடன் குறிப்பிடவேண்டும் என்றும், அப்படி குறிப்பிட்டால் சூப்பர் கணினிகள் செயற்கைக்கோள் துணையுடன் விரைவில் கண்டுபிடிக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார். SARAT ஆப்பைப் பயன்படுத்துவது குறித்து விரைவில் கடற்படை பாதுபாப்பு படையினர் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த SARAT மொபைல் ஆப் மூலமாக கடலில் தத்தளிப்பவர்கள், காணாமல் போனவர்கள் ஆகியோர் உள்பட பல்வேறு வகையான 64 பொருட்களை மிகவும் எளிதாக கண்டுபிடிக்க முடியும் வகையில் சூப்பர் கணினிகளின் உதவியை கொண்டு ஹைதராபாத் கடல் சேவை மையத்துக்கான இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.
கடலில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மீனவர்கள், செல்போனில் நெட்வொர்க் கிடைத்தால், SARAT-ஐப் பயன்படுத்த முடியும். இது குறிப்பாக மீனவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேடுதல் பணியில் ஈடுபடும்போது, காணாமல் போன பொருள், மனிதர்கள் கடைசியாக எங்கு இருந்தார்கள் என்ற விவரத்தை ஜிபிஎஸ் உதவியுடன் குறிப்பிடவேண்டும் என்றும், அப்படி குறிப்பிட்டால் சூப்பர் கணினிகள் செயற்கைக்கோள் துணையுடன் விரைவில் கண்டுபிடிக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார். SARAT ஆப்பைப் பயன்படுத்துவது குறித்து விரைவில் கடற்படை பாதுபாப்பு படையினர் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது