சீனா நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற உலக இறகு பந்தய போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கோவை வீரர் அருண்குமாருக்கு சிபிஎம் கட்சி சார்பில் பாராட்டி கௌரவிக்கபட்டார்.
கால் மற்றும் தலையை மட்டும் பயன்படுத்தி விளையாடும் இறகு பந்து (செட்டில்கார்க்) விளையாட்டு சீன நாட்டில் மிகப்பிரபலமான போட்டியாகும். சீனா தேசிய விளையாட்டான இந்த விளையாட்டின் உலக போட்டி கடந்த மாதம் 20 ஆம்தேதி முதல் 28 ஆம்தேதிவரை ஹாங்காங் நகரில் நடைபெற்றது.இதில்
இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மூன்று வீரர்களும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்.
ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் மற்றும் அருன்குமார் மற்றும் மோகன்ராஜ் இருவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். உலக சீன இறகுப்பந்தய போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து இந்த வீரர்கள் கோவை வந்தனர்.
இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற வீரர்களின் ஒருவரான அருண்குமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை எஸ்எஸ்குளம் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் விளையாட்டு கழகத்தின் பொருப்பாளராகவும் உள்ளார்.உலக இறகு பந்தய போட்டியில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அருண்குமாருக்கு பி.சம்பத் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கால் மற்றும் தலையை மட்டும் பயன்படுத்தி விளையாடும் இறகு பந்து (செட்டில்கார்க்) விளையாட்டு சீன நாட்டில் மிகப்பிரபலமான போட்டியாகும். சீனா தேசிய விளையாட்டான இந்த விளையாட்டின் உலக போட்டி கடந்த மாதம் 20 ஆம்தேதி முதல் 28 ஆம்தேதிவரை ஹாங்காங் நகரில் நடைபெற்றது.இதில்
இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மூன்று வீரர்களும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்.
ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் மற்றும் அருன்குமார் மற்றும் மோகன்ராஜ் இருவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். உலக சீன இறகுப்பந்தய போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து இந்த வீரர்கள் கோவை வந்தனர்.
இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற வீரர்களின் ஒருவரான அருண்குமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை எஸ்எஸ்குளம் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் விளையாட்டு கழகத்தின் பொருப்பாளராகவும் உள்ளார்.உலக இறகு பந்தய போட்டியில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அருண்குமாருக்கு பி.சம்பத் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.