இறகுபந்தய போட்டியில் வெண்கலம் வென்ற கோவை வீரருக்கு பாராட்டு.

சீனா நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற உலக இறகு பந்தய போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கோவை வீரர் அருண்குமாருக்கு சிபிஎம் கட்சி சார்பில் பாராட்டி கௌரவிக்கபட்டார். 

கால் மற்றும் தலையை மட்டும் பயன்படுத்தி விளையாடும் இறகு பந்து (செட்டில்கார்க்) விளையாட்டு சீன நாட்டில் மிகப்பிரபலமான போட்டியாகும். சீனா தேசிய விளையாட்டான இந்த விளையாட்டின் உலக போட்டி கடந்த மாதம் 20 ஆம்தேதி முதல் 28 ஆம்தேதிவரை ஹாங்காங் நகரில் நடைபெற்றது.இதில் 

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மூன்று வீரர்களும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்.

ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் மற்றும் அருன்குமார் மற்றும் மோகன்ராஜ் இருவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். உலக சீன இறகுப்பந்தய போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து இந்த வீரர்கள் கோவை வந்தனர்.

இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற வீரர்களின் ஒருவரான அருண்குமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை எஸ்எஸ்குளம் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் விளையாட்டு கழகத்தின் பொருப்பாளராகவும் உள்ளார்.உலக இறகு பந்தய போட்டியில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அருண்குமாருக்கு பி.சம்பத் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...