இறகுபந்தய போட்டியில் வெண்கலம் வென்ற கோவை வீரருக்கு பாராட்டு.

சீனா நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற உலக இறகு பந்தய போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கோவை வீரர் அருண்குமாருக்கு சிபிஎம் கட்சி சார்பில் பாராட்டி கௌரவிக்கபட்டார். 

கால் மற்றும் தலையை மட்டும் பயன்படுத்தி விளையாடும் இறகு பந்து (செட்டில்கார்க்) விளையாட்டு சீன நாட்டில் மிகப்பிரபலமான போட்டியாகும். சீனா தேசிய விளையாட்டான இந்த விளையாட்டின் உலக போட்டி கடந்த மாதம் 20 ஆம்தேதி முதல் 28 ஆம்தேதிவரை ஹாங்காங் நகரில் நடைபெற்றது.இதில் 

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மூன்று வீரர்களும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்.

ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் மற்றும் அருன்குமார் மற்றும் மோகன்ராஜ் இருவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். உலக சீன இறகுப்பந்தய போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து இந்த வீரர்கள் கோவை வந்தனர்.

இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற வீரர்களின் ஒருவரான அருண்குமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை எஸ்எஸ்குளம் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் விளையாட்டு கழகத்தின் பொருப்பாளராகவும் உள்ளார்.உலக இறகு பந்தய போட்டியில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அருண்குமாருக்கு பி.சம்பத் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...