கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில் “இந்த குறைதீர் கூட்டத்தில் 32, 57, 59, 61, 62 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் சரிவர இயங்கவில்லை எனறு 8 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 33, 57, 60 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக 6 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
56, 57 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலை பழுது நீக்குதல் தொடர்பாக 4 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 56, 57 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக 2 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 57-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்தல் தொடர்பாக 3 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 61-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் அய்யம்மாள் என்பவருக்கு குடிநீர் இணைப்பு எண் வழங்குமாறு கோரிக்கை மனு பெறப்பட்டது.
இம்மனு மீது மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறை தீர்க்கப்பட்டது.
இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.