எர்ணாகுளம்- வேளாங்கண்ணிக்கு பொள்ளாச்சி வழியே ஆக.,31 முதல் சிறப்பு ரயில் இயக்கம்


ஓணம் பண்டிகை வரும் செப்.,3ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 31 முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு இரவு 9 மணிக்கும், செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதி வரை வேளாங்கண்ணி - எர்ணாகுளத்திற்கு மதியம் 2:20 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7-ம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 10:15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

அதேப்போல், செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 3:30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். 

ரயில் செல்லும் வழித்தடங்கள்:

ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய வழித்தடங்களில் ரயில் நின்று செல்லும்.

அதில் ஈரடுக்கு ஏ.சி., மூன்றடுக்கு ஏ.சி., 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 பொது மற்றும் 2 நிலை பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் உபகரண பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என அறிவித்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...