இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து, கோவையின் பல்வேறு இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. சசிகுமாரின்  இறுதி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்பட்டது. 

தொடர்ந்து இந்த கொலை வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி இவ்வழக்கு குற்றபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. 

சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையதாக முபாரக், சதாம் ஆகிய இருவரின் புகைப்படத்தை போலீசார் வெளிட்டனர். மேலும், அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் இன்று மாலை சாய்பாபா காலனி பகுதியில் பதுங்கியிருந்த சதாம்-ஐ போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேடப்படும் மற்றொரு நபர்



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...