கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து, கோவையின் பல்வேறு இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்பட்டது.
தொடர்ந்து இந்த கொலை வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி இவ்வழக்கு குற்றபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையதாக முபாரக், சதாம் ஆகிய இருவரின் புகைப்படத்தை போலீசார் வெளிட்டனர். மேலும், அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாலை சாய்பாபா காலனி பகுதியில் பதுங்கியிருந்த சதாம்-ஐ போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேடப்படும் மற்றொரு நபர்

இதை தொடர்ந்து, கோவையின் பல்வேறு இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்பட்டது.
தொடர்ந்து இந்த கொலை வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி இவ்வழக்கு குற்றபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையதாக முபாரக், சதாம் ஆகிய இருவரின் புகைப்படத்தை போலீசார் வெளிட்டனர். மேலும், அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாலை சாய்பாபா காலனி பகுதியில் பதுங்கியிருந்த சதாம்-ஐ போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேடப்படும் மற்றொரு நபர்
