வால்பாறை அடுத்துள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் நேற்று நள்ளிரவில் நுழைந்த மூன்று காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த தோட்ட அதிகாரி வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் சுவர்களை இடித்து நாசம் செய்தது.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் அதிகாலை சுமார் 3 மணியளவில் நல்லமுடி எஸ்டேட்டில் உள்ள தேயிலைத் தோட்ட அதிகாரி ஜெயராம் வீட்டின் ஜன்னல் சுவர்களை உடைத்து வீட்டில் இருந்த மிக்சி, வாஸிங் மிசின், குளிர் சாதனம் உள்ளிட்டவற்றை உடைத்தது. தொடர்ந்து, வீட்டில் இருந்த அதிகாரி ஜெயராம் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த துணியில் தீயிட்டு வெளிச்சம் காட்டியதைத் தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் இருந்து சென்றது.

இதனிடையே, ஹைபாரஸ்ட், நல்லமுடி எஸ்டேட் பகுதியின் அருகாமையில் பூஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வனத்துறை முகாம் உள்ள நிலையில் யானை வறுவதைக் கூட கண்காணிக்காமல் வனத்துறையினர் செயல்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இதைத்தொடர்ந்து, அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் அதிகாலை சுமார் 3 மணியளவில் நல்லமுடி எஸ்டேட்டில் உள்ள தேயிலைத் தோட்ட அதிகாரி ஜெயராம் வீட்டின் ஜன்னல் சுவர்களை உடைத்து வீட்டில் இருந்த மிக்சி, வாஸிங் மிசின், குளிர் சாதனம் உள்ளிட்டவற்றை உடைத்தது. தொடர்ந்து, வீட்டில் இருந்த அதிகாரி ஜெயராம் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த துணியில் தீயிட்டு வெளிச்சம் காட்டியதைத் தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் இருந்து சென்றது.

இதனிடையே, ஹைபாரஸ்ட், நல்லமுடி எஸ்டேட் பகுதியின் அருகாமையில் பூஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வனத்துறை முகாம் உள்ள நிலையில் யானை வறுவதைக் கூட கண்காணிக்காமல் வனத்துறையினர் செயல்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
