செட்டிப்பாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கோவை போத்தனூர் - பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் முடிவடைந்து கடந்த ஒருவாரத்திற்கு முன்பு இரயில்கள் சேவை துவங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் போத்தனூர் - பொள்ளாச்சி இரயில் வழித்தடத்தில் செட்டிபாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செட்டிபாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க இரயில்வே துறை அனுமதி அளித்த நிலையில், இதற்காக பேரூராட்சி நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினரும் 49 லட்ச ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும், உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்கக்கோரி கோரிக்கை விடுத்தனர். விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...