நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும், மருத்துவ படிப்பிற்கு நிரந்தரமாக நுழைவு தேர்வு நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தினர்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டு இருப்பதாகவும், நீட் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர்கள், நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு பெற வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...