தொழிலாளர் ஊதிய உயர்வு பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 7ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் நிறுவன தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ரங்கநாதர் வால்வ்ஸ் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2016-ம் ஆண்டு டிசம்பருடன் ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்ட நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கூடுதல் சம்பளம் தர நிர்வாகம் மறுத்து விட்டதால் இது தொடர்பான பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை வேறு கிளைகளுக்கு மாற்ற நிர்வாகம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடிவு செய்யக் கோரியும் இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட கோரியும் ஏஐடியுசி சங்கம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் இல்லையேல் வருகிற 7ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த ஆர்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கோவை தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ரங்கநாதர் வால்வ்ஸ் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2016-ம் ஆண்டு டிசம்பருடன் ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்ட நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கூடுதல் சம்பளம் தர நிர்வாகம் மறுத்து விட்டதால் இது தொடர்பான பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை வேறு கிளைகளுக்கு மாற்ற நிர்வாகம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடிவு செய்யக் கோரியும் இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட கோரியும் ஏஐடியுசி சங்கம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் இல்லையேல் வருகிற 7ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த ஆர்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.