தொழிலாளர் ஊதிய பிரச்சனையில் அரசு தலையிடாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்- ஏஐடியுசி முடிவு

தொழிலாளர் ஊதிய உயர்வு பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 7ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் நிறுவன தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ரங்கநாதர் வால்வ்ஸ் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2016-ம் ஆண்டு டிசம்பருடன் ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்ட நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கூடுதல் சம்பளம் தர நிர்வாகம் மறுத்து விட்டதால் இது தொடர்பான பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை வேறு கிளைகளுக்கு மாற்ற நிர்வாகம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடிவு செய்யக் கோரியும் இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட கோரியும் ஏஐடியுசி சங்கம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் இல்லையேல் வருகிற 7ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த ஆர்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...