கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 பயணாளிகளுக்கு ரூ.1,50,000 மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் (31.07.2017) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்-யிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கோவை மாவட்டம் வடக்கு வட்டம், நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த கே.சின்னச்சாமி, ஒத்தக்கால் மண்டபத்தைச் சார்ந்த தங்கம்மாள் ஆகியோர் பாம்பு கடித்து உயிரிழந்ததோருக்கு முதலமைச்சர் நிவாராண நிதியின் கீழ் 2 பயணாளிகளுக்கு தலா ரூ.50,000-மும், கோவை மாவட்டம் தெற்கு, நீலிக்கோணம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமியின் குடும்பத்தாருக்கு ரூ.50,000-மும் ஆகமொத்தம் 3 பயணாளிகளுக்கு ரூ.1,50,000 லட்சம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் (31.07.2017) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்-யிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கோவை மாவட்டம் வடக்கு வட்டம், நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த கே.சின்னச்சாமி, ஒத்தக்கால் மண்டபத்தைச் சார்ந்த தங்கம்மாள் ஆகியோர் பாம்பு கடித்து உயிரிழந்ததோருக்கு முதலமைச்சர் நிவாராண நிதியின் கீழ் 2 பயணாளிகளுக்கு தலா ரூ.50,000-மும், கோவை மாவட்டம் தெற்கு, நீலிக்கோணம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமியின் குடும்பத்தாருக்கு ரூ.50,000-மும் ஆகமொத்தம் 3 பயணாளிகளுக்கு ரூ.1,50,000 லட்சம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.