அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின கீழ் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை நகராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின கீழ் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை நகராட்சி பகுதிகளில் நகராட்சிகளின் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று பட்டியல் தயார் செய்ய உத்தேசிகப்பட்டுள்ளது.

எனவே பயனாளிகளகிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கு வருகிற ஆகஸ்ட் 4 முதல் 5ம் தேதி வரை கோவை மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் நகராட்சிகள் இணைந்து சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இச்சிறப்பு முகாமில் இந்தியாவில் வெறு எந்தப் பகுதியிலும் கான்கிரீட் வீடு இல்லாத நலிவடைந்த பிரிவின் கீழ் (மாத வருமானம் ரூ.25.000) வாழும் குடும்பங்கள் கீழ்க்கண்ட முறைகளில் ஒன்றில் பயன் பெறலாம்.

1) பயனாளிகள் தங்களுக்கு சொந்தமான மனையில் புதிய கான்கிரீட் குடியிருப்புகள் (300 சதுர அடி பரப்பளவு) கட்டுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத் தொகையான ரூ.2.10 இலட்சங்கள் பெற்று தாங்களாகவே வீடு கட்டிக் கொள்ளலாம்.

2) அரசுக்குச் சொந்தமான ஆட்சேபகரமான நிலங்களில் குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு பயனாளிகளின் பங்களிப்புடன் அரசால் கட்டப்படும் குடியிருப்புகளில்  ஒதுக்கீடு பெறலாம்.

3) வங்கிகள் மூலமாக 6.5 சதவிகிதம் வட்டிக்கான மானியத்திலும் கடன் பெற்று வீடுகள் கட்டவும் மற்றும் வீடுகள் வாங்கிக் கொள்ளவும் விரும்பும் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

எனவெ பயனாளிகள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் நகராட்சிகள் இணைந்து நடத்தும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு இலவசமாக விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...