பயிர் காப்பீட்டு திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிடக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

கோவையில் விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிடக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஈடுபட்டனர். அப்போது விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டில் கடன் வழங்குவதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மட்டுமே பயிர் கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனங்களிடம் இது ஒப்படைக்கப்பட்டால், போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...