எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது நீலகிரி ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று (ஜூலை 30) மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில், ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஸ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வரும் செப்டம்பர் 11ம் தேதியன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.



ஆலோசனைக் கூட்டத்தில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்-யின் நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், அதற்கான கோப்புகளை விரைவில் சமர்ப்பிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.



முன்னதாக உதகை ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சிறப்பு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான மாபெரும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



இம்முகாமில் சிறப்பு மருத்துவர்களாக இருதய நோய் நிபுணர், பல் பரிசோதனை நிபுணர், கண் பரிசோதனை நிபுணர் மற்றும் பொது நல மருத்துவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிசோதனை செய்தனர். இம்முகாமில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...