லக்ஷ்மி மெஷின் வொர்க்கர்ஸ் நிறுவனம் சார்பில் டிஜே நினைவு புகைப்படக் கண்காட்சி

லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் புகைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் டிஜே நினைவு புகைப்படக் கண்காட்சி மற்றும் போட்டி நடைபெற்றது. 



இப்போட்டியானது, லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.ஜெயவர்த்தனவெலு நினைவாக 2012 முதல் கொண்டாடப்படுகிறது. 



அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற புகைப்படம் எடுக்கும் போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். 



கடந்த ஜூன் 30ம் தேதியன்று www.djmpc.in என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலம் டிஜேஎம்பிசி 2017-ல் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பாலன் மாதவன், ஆபூர்பா குமார் தாஸ் மற்றும் தியோடர்பாஸ்கரன், கே. மருதாசலம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்தக் கண்காட்சி கோவை கஸ்தூரி ஸ்ரீநிவாசன் கலாச்சார மையத்தில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும்.



விலங்குகள் மற்றும் காடு சார்ந்த தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 1484 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களிடம் இருந்து 6674 பதிவுகள் பெறப்பட்டது. 

இந்த புகைப்படப் போட்டியில் விலங்குகள் புகைப்படப் பிரிவில் சச்சின் ராய் முதல் பரிசும், நிதின் ஜெயின் இரண்டாம் பரிசும் வென்றனர். தொடர்ந்து, நிலப்பரப்பு புகைப்படப் பிரிவில் திவாஸ் ஜி ஹெட்ஜ் முதல் பரிசும், தேப்ராஜ் சக்ரபர்த்தி இரண்டாம் பரிசும் வென்றனர். முதல் பரிசிற்கு தலா ரூ.2.5 லட்சம் ரூபாயியும், இரண்டாம் பரிசிற்கு ரூ.1.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...