லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் புகைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் டிஜே நினைவு புகைப்படக் கண்காட்சி மற்றும் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியானது, லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.ஜெயவர்த்தனவெலு நினைவாக 2012 முதல் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற புகைப்படம் எடுக்கும் போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஜூன் 30ம் தேதியன்று www.djmpc.in என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலம் டிஜேஎம்பிசி 2017-ல் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பாலன் மாதவன், ஆபூர்பா குமார் தாஸ் மற்றும் தியோடர்பாஸ்கரன், கே. மருதாசலம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்தக் கண்காட்சி கோவை கஸ்தூரி ஸ்ரீநிவாசன் கலாச்சார மையத்தில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும்.

விலங்குகள் மற்றும் காடு சார்ந்த தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 1484 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களிடம் இருந்து 6674 பதிவுகள் பெறப்பட்டது.
இந்த புகைப்படப் போட்டியில் விலங்குகள் புகைப்படப் பிரிவில் சச்சின் ராய் முதல் பரிசும், நிதின் ஜெயின் இரண்டாம் பரிசும் வென்றனர். தொடர்ந்து, நிலப்பரப்பு புகைப்படப் பிரிவில் திவாஸ் ஜி ஹெட்ஜ் முதல் பரிசும், தேப்ராஜ் சக்ரபர்த்தி இரண்டாம் பரிசும் வென்றனர். முதல் பரிசிற்கு தலா ரூ.2.5 லட்சம் ரூபாயியும், இரண்டாம் பரிசிற்கு ரூ.1.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

இப்போட்டியானது, லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.ஜெயவர்த்தனவெலு நினைவாக 2012 முதல் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற புகைப்படம் எடுக்கும் போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஜூன் 30ம் தேதியன்று www.djmpc.in என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலம் டிஜேஎம்பிசி 2017-ல் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பாலன் மாதவன், ஆபூர்பா குமார் தாஸ் மற்றும் தியோடர்பாஸ்கரன், கே. மருதாசலம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்தக் கண்காட்சி கோவை கஸ்தூரி ஸ்ரீநிவாசன் கலாச்சார மையத்தில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும்.

விலங்குகள் மற்றும் காடு சார்ந்த தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 1484 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களிடம் இருந்து 6674 பதிவுகள் பெறப்பட்டது.
இந்த புகைப்படப் போட்டியில் விலங்குகள் புகைப்படப் பிரிவில் சச்சின் ராய் முதல் பரிசும், நிதின் ஜெயின் இரண்டாம் பரிசும் வென்றனர். தொடர்ந்து, நிலப்பரப்பு புகைப்படப் பிரிவில் திவாஸ் ஜி ஹெட்ஜ் முதல் பரிசும், தேப்ராஜ் சக்ரபர்த்தி இரண்டாம் பரிசும் வென்றனர். முதல் பரிசிற்கு தலா ரூ.2.5 லட்சம் ரூபாயியும், இரண்டாம் பரிசிற்கு ரூ.1.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.