நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் இன்ஜினியர் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் நித்தின்சர்மா. இவரை கடந்த இரு நாட்களுக்கு முன்பு கல்லூரி வாயிலில் வைத்து கடத்திவிட்டதாக அவரது தந்தை ராஜ்பீர் சர்மாவிற்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, தனது மகனைக் காணவில்லை எனவும், தற்போது மகனை கடத்தியவர்கள் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக மகனின் தந்தை ராஜ்பீர் சர்மா மேல் குன்னூர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
தொடர்ந்து, குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழின் உத்தரவின் பேரில் குன்னூர் நகர காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் மற்றும் மேல் குன்னூர் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதற்கிடையில் தந்தை ராஜ்பீர் சர்மாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதற்கட்டமாக ரூபாய் ஜம்பது ஆயிரம் கொடுக்குமாறு கூறி உள்ளனர். உடனே மகன் நித்தின் சர்மா கணக்கில் ரூபாய் 40 ஆயிரத்தினை தந்தை செலுத்தி உள்ளார்.
இதில் 38 ஆயிரம் ரூபாய் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தப்பட்ட அன்று ரூபாய் 1800 ரூபாய் நித்தின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது போலிசார் விசாரனையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் செல்போன் உரையாடலைக் கண்காணித்ததில் நித்தின் சர்மா சென்னையில் இருந்து பேசுவது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு இரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபர்ரை ரயில்வே போலிசார் பிடித்து விசாரனை செய்ததில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நித்தின் சர்மா என்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ள மேல் குன்னூர் ஆய்வாளர் ஜெயமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஈரோடு விரைந்தனர். இதன் தொடர்ச்சியாக செல்போனில் பேசியது மகனா? அல்லது அவனுடன் பேசியது யார்? நித்தின் சர்மா கடத்தப்பட்டாரா அல்லது தந்தையிடம் இருந்து பணம்பெரும் வகையில் நடத்தப்பட்ட நாடகமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, தனது மகனைக் காணவில்லை எனவும், தற்போது மகனை கடத்தியவர்கள் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக மகனின் தந்தை ராஜ்பீர் சர்மா மேல் குன்னூர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
தொடர்ந்து, குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழின் உத்தரவின் பேரில் குன்னூர் நகர காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் மற்றும் மேல் குன்னூர் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதற்கிடையில் தந்தை ராஜ்பீர் சர்மாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதற்கட்டமாக ரூபாய் ஜம்பது ஆயிரம் கொடுக்குமாறு கூறி உள்ளனர். உடனே மகன் நித்தின் சர்மா கணக்கில் ரூபாய் 40 ஆயிரத்தினை தந்தை செலுத்தி உள்ளார்.
இதில் 38 ஆயிரம் ரூபாய் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தப்பட்ட அன்று ரூபாய் 1800 ரூபாய் நித்தின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது போலிசார் விசாரனையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் செல்போன் உரையாடலைக் கண்காணித்ததில் நித்தின் சர்மா சென்னையில் இருந்து பேசுவது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு இரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபர்ரை ரயில்வே போலிசார் பிடித்து விசாரனை செய்ததில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நித்தின் சர்மா என்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ள மேல் குன்னூர் ஆய்வாளர் ஜெயமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஈரோடு விரைந்தனர். இதன் தொடர்ச்சியாக செல்போனில் பேசியது மகனா? அல்லது அவனுடன் பேசியது யார்? நித்தின் சர்மா கடத்தப்பட்டாரா அல்லது தந்தையிடம் இருந்து பணம்பெரும் வகையில் நடத்தப்பட்ட நாடகமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.