“இசைஞர் - 2017” இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி நாளை முதல் துவக்கம்!

இசைக் கருவிகளை இசைக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக “இசைஞர்-2017” எனும் போட்டிக்கு கோவை நன்னெறிக் கழகம் சார்பில் சரோஜினி நடராஜ் டிரஸ்ட் மற்றும் தி இந்து நாளிதழ் ஆகியன இணைந்து நடத்துகின்றன. கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இப்போட்டியில் கலந்துகொள்ள கோவை, திருப்பூர் மற்றும் நிலகீரி மாவட்டங்களைச் சேர்ந்த 440 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். போட்டியாளர்களுக்கான தகுதிச் சுற்றுகள் இன்று (ஜூலை 29 - சனிக்கிழமை) காலை 9 மணி முதல் ஆரம்பமாகின்றன.

இறுதிச் சுற்று நாளை (ஜூலை 30 - ஞாயிற்றுகிழமை) மாலை 5:00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இப்போட்டிகளின் நடுவர்களாக அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் இசைத்துறைத் தலைவர் ஜனக மாயாதேவி மற்றும் அவரது சக இசை ஆசிரியர்கள் செயல்பட இருக்கிறார்கள்.

பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சில்க்ஸ் இயக்குனர் கே.விநாயகம் மற்றும் பிரபல கர்நாடக சங்கீத பாடகி கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பரிசளிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை சென்னை சில்க்ஸ், ரேடியோ சிட்டி, சிம்ப்ளிசிட்டி, காட்ஸ்வில்லா ரிசார்ட், உடுமலை.காம், ஃபன் சிட்டி ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அனுமதி இலவசம். 

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...