வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில் தன்னலமற்ற சேவைபுரிந்த ​​​​ஊர்க்காவல் படை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, கோவை மாவட்ட ஊர்க்காவல் படை பிரதேச தளபதியின் மேற்பார்வையில், பெரியநாயக்கன்பாளையம் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினருடன் இணைந்து 150 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.



மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீர்படுத்தவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்கவும் திட்டமிட்ட காவல் பணி, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஆலோசனைப்படி கோவை மாவட்ட ஊர்க்காவல் படையினர் 24.7.2017 மாலை முதல் 25.7.2017 மதியம் 2 மணி வரை சேவையாற்ற பணி ஒதுக்கப்பட்டது.



வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் ஊர்க்காவல் படை நண்பர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் சொந்த பணி முடித்து காவல் பணியாற்றுவது தன்னலமற்ற சேவையாகவும், சமூகப் பணிக்கு அர்ப்பணிப்புக்காக 24.7.2017 இரவு வரை உறக்கம் துறந்து, அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் சிரமம் இல்லாமல் பாதுகாப்பாய் குண்டம் இறங்க வரிசைப்படுத்தி, பொதுமக்களிடையே பொறுமையாய் நடந்து கொண்டு சேவையாற்றினர். இதில் கலந்து கொண்ட மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும், இந்த ஆத்மார்த்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்தது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...