மாணவி வளர்மதி மீது பொய் வழக்கு - டிராபிக் ராமசாமி

மாணவி வளர்மதி மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு இருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை வ.உ.சி மைதானத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் வ.உ.சி. மைதானத்தில் பொது மக்களை காவல் துறையினர் அனுமதிப்பதில்லை என தகவல் வந்ததால் பார்க்க வந்ததாக தெரிவித்தார்.

மேலும், வ.உ.சி. மைதானம் ஆளுங்கட்சியினருக்கும் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டுமே வாடகைக்கு கொடுக்கப்படுவதாகவும், அதிகாரிகள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டியவர், வ.உ.சி. மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாம் அல்லது விளையாட்டு திடலாக மாற்றலாம் என தெரிவித்தார்.

இதனை வலியுறுத்தி மாநகராட்சிஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். மாணவி வளர்மதி மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டு இருக்கின்றனர் என கூறிய அவர், 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் சினமா பைனான்சியர் போத்ரா மீது ஏன் குண்டாஸ் போடவில்லை என கேள்வி எழுப்பினார். கொள்ளையனே வெளியேறு என்ற பெயரில் சென்னை மெரினாவில் வரும் 8ம்தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த இருப்பதாக டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...