அத்திக்கடவு- அவினாசி திட்டம்: போராடிய மக்களுக்கு பயனற்றதாக மாற்றும் முதலமைச்சரின் புதிய திட்டம்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தினை அமல்படுத்தக் கோரி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பல்வேறு வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக முதலமைச்சர் இத்திட்டத்திற்கான பாதைகளை மாற்றி அறிவித்திருப்பது போராடிவரும் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சமீபத்தில் மாநில சட்டசபைக் கூட்டத் தொடரின் போது அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் துவங்கப்படும் என அறிவித்தார். இதில், இத்திட்டம் 2017 டிசம்பரில் தொடங்கி அடுத்த 30 மாதங்களில் முடிவடையும் எனவும் அறிவித்தார்.

பல ஆண்டுகளாக இந்த திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு அளித்தனர். இருப்பினும், முதலமைச்சர் இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளை மாற்றி அறிவித்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 

எதன் அடிப்படையில் இத்திட்டத்திற்கான பாதைகளை மாற்றினார்கள் என்ற சந்தேகம் இருந்தாலும் கோவையின் அன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களை இதில் இணைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் மூன்று நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அவை அன்னூர், காலிங்கராயன் பாளையம் மற்றும் ஈராடு பெருந்துறையில் அமைக்கப்படவுள்ளன. இந்த மூன்று நீர் உந்து நிலையங்கள் இடையே பல்வேறு கிராமங்களில் நீர் பயணிக்கும். அதில் இருந்து மின்சாரம் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறு செல்லும் நீரானது அன்னூருக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு செல்லாமலேயே திட்டம் உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னூர் பகுதி மக்களின் நீண்ட கால போராட்டங்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதால் மீண்டும் பரிசீலனை செய்து திட்டத்தினை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார் பி.கே.செல்வராஜ் எனும் சமூக ஆர்வலர்.

"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தினை எதிர்பார்த்து இருந்த கிராமவாசிகளுக்கு நீர் வழங்கப்படாமல் திட்டத்தை மாற்றியது மிகப்பெரும் அநீதியாகும். இத்திட்டத்தினை மாற்றி அமைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலமாக தமிழக முதலமைச்சருக்கு எடுத்துரைக்க உள்ளதாகவும் பி.கே.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...