சி.ஆர்.ஐ. அறநிலை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

கோவை மாவட்டம், கீரணத்தம் கிராமத்தில் அமைந்துள்ள சி.ஆர்.ஐ. அறநிலை, பொது மக்களின் நலன் கருதி ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் கல்வி நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பொது மக்களின் தேவைக்கான அத்தியாவசியக் கட்டமைப்புகளை நிறுவ நிதியுதவி வழங்குதல் போன்ற மற்றும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 



மேலும், கீரணத்தம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு கீரணத்தம் கிராமத்தில் ஓர் பல்நோக்கு மருத்துவமனை அமைத்திடத் திட்டமிட்டு, அது தொடர்பான பணிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக சி.ஆர்.ஐ. அறநிலை, கோவை சங்கரா கண் மருத்துவ மையத்துடன் இணைந்து கீரணத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களின் ஏழை எளிய மக்களின் நலன் கருதி இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

இந்த முகாமில் கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம், கொண்டையம்பாளையம், வரதயங்கார்பாளையம், குரும்பாளையம், கோவில் பாளையம், கோட்டைப்பாளையம், அக்ரஹார சாமக்குளம், அத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம், இடிகரை, வட்டமலைப் பாளையம், சின்னவேடம்பட்டி, சின்னமேட்டுப் பாளையம், சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையும், கண் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. கண் மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் 26 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக கீரணத்தம் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுகுமார், சி.ஆர்.ஐ. அறநிலையின் மருத்துவ மையத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து இலவச கண் மருத்துவ முகாமினைத் துவக்கிவைத்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...