ஜமாத்துகள் ஒருங்கிணைப்பாளரை கடத்த முயன்ற வழக்கில் கிச்சான் புகாரி உள்ளிட்ட மூன்று நிதிமன்றத்தில் ஆஜர்

அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லாவை கடத்த முயற்சித்த சம்பத்தின் பின்னணியில்  வெடிகுண்டு வழக்கில் சிறையில் உள்ள அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் பாருக் கடந்த மார்ச் மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மத அடிப்படைவாதிகள் சதாம் உசேன், அகரம் ஜிந்தா, முனாப், அன்சாத், ஜாபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாருக்கினை கொலை செய்த 6 பேரின் குடும்பத்தினருக்கு உதவ அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லாவை பணம் கேட்டு கடத்திச் செல்ல கொலையாளிகளின் நண்பர்கள் திட்டமிட்டனர்.

இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் கடந்த மே மாதம் இனாயத்துல்லாவை கடத்த முயன்றதாக 8 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, இனாயத்துல்லா கடத்தல் முயற்சி வழக்கினை உக்கடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பெங்களூர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி, ஜுல்பிக்கர் அலி, அஸ்கர்அலி ஆகியோர் மூளையாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மூவருக்கும் கடந்த 18-ம் தேதி கோவை காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் இன்று கிச்சான்புகாரி உள்ளிட்ட மூவரும் கோவை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மூவரும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நாளை காலை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாகாப்புடன் காவல்துறை வாகனத்தில் பெங்களூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர் .பாரூக் கொலையில் ஈடுபட்டவர்கள் கொலை சம்பவத்திற்கு முதல் நாள் பெங்களூர் சிறைக்கு சென்று கிச்சான் புகாரியை சந்தித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே பாரூக் கொலை வழக்கிலும் அல் உம்மா இயக்கத்தின் கிச்சன் புகாரி உள்ளிட்ட மூவரும் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...