கோவை தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஈரானிய மாணவர்கள் புகார்

கோவையில் மருத்துவ படிப்பிற்கு 2 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு அதனை திரும்ப தராமல் ஏமாற்றுவதாக கோவையில் உள்ள தனியார் கல்லூரி மீது ஈரானிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை திருச்சி சாலை கண்ணம்பாளையம் பகுதியில் ஆர்.வி.எஸ் கல்விக் குழுமங்களுக்கு சொந்தமான பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், ஈரான் நாட்டு மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், சுமார் 20 கோடி ரூபாய் வரை தங்களிடம் பல் மருத்துவ படிப்பிற்காக ஆர்விஎஸ் கல்லூரி நிர்வாகம் பெற்றுக்கொண்டது. ஆனால் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்துள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தங்களை நீக்கியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தங்களது பணத்தை திரும்பத் தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால், நிர்வாகம் பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் தங்களது கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்".

இவ்வாறு அந்த மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...