அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017-க்கான கலந்தாய்வு சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017-க்கான கலந்தாய்வு சேர்க்கையையொட்டி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தின் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் ஆனைகட்டி மற்றும் சில தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களுக்கு ஆகஸ்ட் - 2017 இரண்டாம் கட்ட கலந்தாய்வு சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதற்கான கடைசி தேதி 10.08.2017 ஆகும். 

எனவே தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 10.08.2017 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து பயன்பெற தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரர்களின் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...