ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “பெருநாள் சந்திப்பு” அனுசரிப்பு

கோவை வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “பெருநாள் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.



ஒவ்வோர் வருடமும் ரமளான் பெருநாள் முடிந்த பின் மாநகரின் அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், சான்றோர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவை அமைப்பினர்கள் என பலதரப்பினரையும் ஒருங்கிணைத்து அவர்களுடன் நல்லிணக்கம் பேணும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியினை முஹம்மது முஸ்தபா துவக்கி வைத்தார். இந்த பெருநாள் சந்திப்பின் நோக்கம் மற்றும் ஜமாஅத்தின் பணிகள் குறித்து கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர் ஜனாப். கே.ஏ.சையது இப்ராஹிம் உரையாற்றினார்.



தொடர்ந்து, சமூகங்களுக்கிடையே புரிதல்கள் மேம்படவேண்டும் என்றும், இத்தகைய சந்திப்புகள் வருடம்தோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கோவை கே.ஜி. மருத்துவமனையின் தலைவர், மருத்துவர் பக்தவத்சலம் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், விரைவு அதிரடிப்படை 105-வது படைப்பிரிவின் உதவி கமாண்டன்ட் சுந்தரக்குமார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் அனந்த கிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், அருட்தந்தை ஜான் பீட்டர், இயக்குனர், திவ்யோதயா, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறையினரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...