விளாங்குறிச்சி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாநகராட்சி 32-வது வார்டு, விளாங்குறிச்சி கிராமத்தில் கனிஷ்கா வாட்டர்ஸ் என்ற பெயரில் சதீஸ் என்பவரால் நாள் ஒன்றுக்கு தற்போது ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிப்பதாக தெரிய வருகிறது. இந்நிறுவனம் தண்ணீர் விநியோகம் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள TN 38 BR 5913 லாரியினை பயன்படுத்தியும், மேலும், பல்வேறு லாரிகளின் மலம் தண்ணீர் விற்பனை செய்து வருவதும், உரிய உரிமம் இல்லை என்பதும் தெரியவருகிறது.
வர்த்தக ரீதியாக தண்ணீர் உறிஞ்சி விற்பதால் அருகில் உள்ள விவசாயிகளின் கிணறுகள் வற்றி விடுவதாலும் குடிநீர் பயன்பாட்டில் உள்ள பொதுக் கிணறுகளும் வற்றி விட்டன.
எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாநகராட்சி 32-வது வார்டு, விளாங்குறிச்சி கிராமத்தில் கனிஷ்கா வாட்டர்ஸ் என்ற பெயரில் சதீஸ் என்பவரால் நாள் ஒன்றுக்கு தற்போது ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிப்பதாக தெரிய வருகிறது. இந்நிறுவனம் தண்ணீர் விநியோகம் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள TN 38 BR 5913 லாரியினை பயன்படுத்தியும், மேலும், பல்வேறு லாரிகளின் மலம் தண்ணீர் விற்பனை செய்து வருவதும், உரிய உரிமம் இல்லை என்பதும் தெரியவருகிறது.
வர்த்தக ரீதியாக தண்ணீர் உறிஞ்சி விற்பதால் அருகில் உள்ள விவசாயிகளின் கிணறுகள் வற்றி விடுவதாலும் குடிநீர் பயன்பாட்டில் உள்ள பொதுக் கிணறுகளும் வற்றி விட்டன.
எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.