அடிப்படை வசதி கேட்டவர்களை விரட்டியடித்தது போலீஸ் : 'வீடு வரும் ஆனா வராது' அலட்சிய குரல் கொடுக்கும் அதிகாரிகள்

கோவை காந்திபார்க் பகுதியில் சாடையடித்து வாழ்க்கை நடத்தும் மக்கள் ஃப்ளாட் பாரங்களில் தங்கியுள்ளனர். 

கைக்குழந்தைகள், பள்ளி சிறார்களுடன் சுமார் 30க்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்த இடம் தடாகம் சாலையில் உள்ளது.

தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும் என்றும், குழந்தைகள் மேற்படிப்பை தொடர சாதிச்சான்றிதழ் வேண்டும் என்றும் அப்பகுதியில் வாழும் மக்கள் சிம்ப்ளிசிட்டி வாயிலாக தெரிவித்தனர்.



இது தொடர்பாக, அம்மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அபாயமான சூழலில் குழந்தைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் வீடியோ மூலமாக காட்சிப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், இன்று மாலை அப்பகுதிக்கு வந்த போலீசார், அம்மக்களை உடனடியாக இடத்தை காலி செய்ய வலியுறுத்தினர். 



சிறிது அவகாசம் கூட கொடுக்கமால், இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் நடவடிக்கை எடுப்போம் என்றும் விரட்டியடித்தனர். 

போலீசாருடன், அரசு அதிகாரிகளும் அப்பகுதிக்கு சென்று மக்களை அங்கிருந்து அகற்றுவதில் மும்முரமாய் இருந்தனர். ஆனால், அவர்கள் எங்கு சென்று தங்குவது என்ற கேள்விக்கு அதிகாரிகளிடம் பதில் இல்லை. 

அதிகாரிகளின் அச்சுறுத்தலினால், தங்குமிடத்தை தேடி தற்போது அனாதைகளாக சாலையில் அலைகின்றனர் அம்மக்கள்.

இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 

இந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வீடு வேண்டி மனு அளித்துள்ளனர். அதன்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அவர்களுக்கு உக்கடம் பஸ்டிப்போ முன்புறம் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது.



இந்த அறிவிப்பை தொடர்ந்து, மக்களிடம் பெயர் மற்றும் பிற விபரங்களை பெற்றுவிட்டோம். 

தனித்தனியே ஒதுக்கப்பட்ட வீடு குடிசை மாற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு கையெழுத்திற்காக சென்றுள்ளது.

ஆனால், ஒரு பிரச்சனை உள்ளது. வீடு ஒதுக்கப்படும் போது டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். அதை யார் செலுத்துவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

வீடு ஒதுக்கப்பட்ட பின்னர், ஃப்ளாட் பாரத்தில் வாழும் மக்களை அந்தந்த வீட்டுக்கு அனுப்ப வழிவகை செய்வது முறையான செயல். ஆனால், சம்மந்தப்பட்ட இடத்தில் இருந்து அம்மக்களை விரட்ட வேண்டும் என்ற நோக்கத்துடனும், கால அவகாசமே இன்றி மக்களை விரட்டியடிக்கும் பாணியில் போலீசார் நடந்து கொண்டது சாட்டையடித்து வாழும் மக்களின் முதுகினில் சாட்டையடியாய் விழுந்துள்ளது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...