'ஏ' சான்றிதழை கலாய்க்கும் 'தரமணி'

தரமான படங்களை இயக்கிவரும் ராம்-யின் அடுத்த திரைப்படம் தரமணி. கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராம்-ன் தங்க மீன்கள் படத்திற்கு பின்பு வேறு எந்த படமும் வெளியாகாததால், தரமணி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்ததாகவும், ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தரமணி போஸ்டர் இன்று இயக்குனர் ராம்-ன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த போஸ்டரில் படத்திற்கு அளிக்கப்பட்ட 'ஏ' சான்றிதழை கலாய்க்கும் விதமாக வாசகம் இடம்பெற்றுள்ளது. 

"தணிக்கைக் குழுவின் கூற்றுப்படி ஆண் 'ரா'வாக மது அருந்தினால் U/A. பெண் 'ரா'வாக மது அருந்தினால் A. ஆக தரமணி A" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 

போஸ்டரில் இடம்பெற்ற இந்த வாசகத்தின் மூலம் பெண் மது அருந்தும் காட்சிகளை அடிப்படையாக கொண்டு தணிக்கைக்குழு இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியிருப்பதாக தெரிகிறது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...