'ஏ' சான்றிதழை கலாய்க்கும் 'தரமணி'

தரமான படங்களை இயக்கிவரும் ராம்-யின் அடுத்த திரைப்படம் தரமணி. கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராம்-ன் தங்க மீன்கள் படத்திற்கு பின்பு வேறு எந்த படமும் வெளியாகாததால், தரமணி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்ததாகவும், ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தரமணி போஸ்டர் இன்று இயக்குனர் ராம்-ன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த போஸ்டரில் படத்திற்கு அளிக்கப்பட்ட 'ஏ' சான்றிதழை கலாய்க்கும் விதமாக வாசகம் இடம்பெற்றுள்ளது. 

"தணிக்கைக் குழுவின் கூற்றுப்படி ஆண் 'ரா'வாக மது அருந்தினால் U/A. பெண் 'ரா'வாக மது அருந்தினால் A. ஆக தரமணி A" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 

போஸ்டரில் இடம்பெற்ற இந்த வாசகத்தின் மூலம் பெண் மது அருந்தும் காட்சிகளை அடிப்படையாக கொண்டு தணிக்கைக்குழு இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியிருப்பதாக தெரிகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...