ஆடி அமாவாசை நாளில் ஆறு, குளங்கள், கடற்கரைகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் ஈரோடு பவானி கூடுதுறை, கொடுமுடி, திருப்பூர் மாவட்டம் உடுமலை, பேரூர் நொய்யல் படித்துறை உள்ளிட்ட இடங்களில் புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், பேரூர் நொய்யல் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டில் இன்று ஈடுபட்டனர். ஆடிமாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை விட இன்று பேரூர் கோவிலில் கூட்டம் அதிகளவிலேயே காணப்பட்டது. இதில், இறந்துபோன தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து எள், அரசி, சர்க்கரை, பழம் ஆகியன படையலிட்டு பூஜை செய்தனர்.

இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதலே திரளான பக்தர்கள் கோவை மாவட்டம், பேரில் உள்ள நொய்யல் படித்துறையில் திரண்டு இறந்துபோன முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, திதி முடித்துவிட்டு செல்லும்போது ஏழைகளுக்கு அன்னதானம், பசுக்கன்றுகளுக்கு அகத்திக்கீரைகளை வழங்கிச் சென்றனர். இதனால் நொய்யல் படித்துறையில் பக்கதர்களின் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது.

கோவை மாவட்டம், பேரூர் நொய்யல் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டில் இன்று ஈடுபட்டனர். ஆடிமாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை விட இன்று பேரூர் கோவிலில் கூட்டம் அதிகளவிலேயே காணப்பட்டது. இதில், இறந்துபோன தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து எள், அரசி, சர்க்கரை, பழம் ஆகியன படையலிட்டு பூஜை செய்தனர்.

இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதலே திரளான பக்தர்கள் கோவை மாவட்டம், பேரில் உள்ள நொய்யல் படித்துறையில் திரண்டு இறந்துபோன முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, திதி முடித்துவிட்டு செல்லும்போது ஏழைகளுக்கு அன்னதானம், பசுக்கன்றுகளுக்கு அகத்திக்கீரைகளை வழங்கிச் சென்றனர். இதனால் நொய்யல் படித்துறையில் பக்கதர்களின் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது.