டிஎன்பிஎல் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ கோவைக்கு வந்திருந்தார். டிஎன்பில் தொடக்க விழாவினை நிறைவு செய்த பிரட் லீ பின், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண மெட்ரிக்லேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பயணம் மேற்கொண்டார்.
அங்கு, எஸ்.என்.ஆர் சன்ஸ் சர்ட்டிடபிள் நிறுவனத்தின் கூட்டு நிர்வாக அறங்காவலர் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான லட்சுமிநாராயணசாமி பிரட்லீ-யை வரவேற்றார். தலைமை நிர்வாக அதிகாரி வி. ராம்குமார், கல்லூரி, பள்ளிகள் மற்றும் மருத்துவமனையின் டீன் ஆகியோர் பிரட் லீ-யை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆன்காலஜிக்கு சென்ற பிரட் லீ, அங்கு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் 15 குழந்தைகள் சந்தித்து fலந்துரையாடினார். நிறைவாக, அந்த குழந்தைகள் கையொப்பமிட்ட பந்தை அன்பின் அடையாளமாக பிரட் லீ பெற்றுக்கொண்டார்.
அங்கு, எஸ்.என்.ஆர் சன்ஸ் சர்ட்டிடபிள் நிறுவனத்தின் கூட்டு நிர்வாக அறங்காவலர் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான லட்சுமிநாராயணசாமி பிரட்லீ-யை வரவேற்றார். தலைமை நிர்வாக அதிகாரி வி. ராம்குமார், கல்லூரி, பள்ளிகள் மற்றும் மருத்துவமனையின் டீன் ஆகியோர் பிரட் லீ-யை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆன்காலஜிக்கு சென்ற பிரட் லீ, அங்கு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் 15 குழந்தைகள் சந்தித்து fலந்துரையாடினார். நிறைவாக, அந்த குழந்தைகள் கையொப்பமிட்ட பந்தை அன்பின் அடையாளமாக பிரட் லீ பெற்றுக்கொண்டார்.