சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசியது மறக்க முடியாத அனுபவம் - பிரெட் லீ


சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசியது மறக்க முடியாத அனுபவம் என ஆஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளில் அணிகளுக்கு ஆலோசகராகவும் வர்ணனையாளராகவும் பங்கேற்க ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான பிரெட் லீ தமிழகத்திற்கு வந்துள்ளார்.



இதன் ஒரு பகுதியாக கோவை பேன் பார்க் நிகழ்ச்சி துவக்க விழாவிற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். டி.என்.பி.எல் கிரிகெட் போட்டிகள் தற்போது விளையாடும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு எனவும் இதில் சிறந்து விளங்குபவர்கள் ஐ.பி.எல் மற்றும் இந்திய அணிக்கு விளையாட ஒரு வாய்பாக இந்த போட்டிகள் அமையும் என தெரிவித்தார்.



மேலும், அதிவேகமாக பந்து வீசுவதால் மட்டுமே ஒருவர் தலை சிறந்த பவுலராக வெற்றி பெற முடியாது என்றவர் சரியான முறையில் பந்து வீசுவதும் முறையான பயிற்சி எடுத்து கொள்வதால் மட்டுமே சிறந்த பந்து வீச்சாளராக முடியும் என கூறினார்.

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஒரு ஓவரில் 1 பந்து மட்டுமே பவுன்சராக வீச அனுமதிக்கபட்டுள்ளது பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாக உள்ளது என்றும் வேகமாக பந்து வீசுபவர்கள் வலைபயிற்சியில் அதிக நேரம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் நீண்ட காலம் காயங்களை தவிர்த்து விளையாட முடியும் என தெரிவித்தார்.



தென் ஆப்பிரிக்கா அணி வீரர் கெவின் பீட்டர்சன் 2019ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக கேட்ட கேள்விக்கு அவர் சிறந்த வீரர் எனவும் உலக கோப்பை போட்டிகளில் அவர் விளையாட தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தலை சிறந்த வீரர்கள் விளையாடிய காலத்தில் தானும் விளையாடியது பெருமையாக உள்ளதாகவும் இந்திய அணியில் தலை சிறந்த வீரர்களான சச்சின் தெண்டுல்கர், கங்குலி, சேவாக், லக்‌ஷ்மன் ஆகியோருக்கு பந்து வீசியது சவாலானதாக இருந்தது என தெரிவித்தார்.

உங்கள் அனுபவத்தில் மறக்க முடியாத கிரிக்கெட் வீரர் யார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சச்சினுடன் விளையாடிய தருணங்களை மறக்க முடியாது என தெரிவித்தார். முதன் முதலாக சச்சினுக்கு பந்து வீச சென்ற போது, பந்து வீசுவதை நிறுத்திவிட்டு அவரிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கலாமா என்று தாம் யோசித்திருப்பதாக பிரெட் லீ தெரிவித்தார்.



இந்தியாவுடன் விளையாட செல்லும் போது மற்ற வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும் என்று கூறுவார்கள் எனவும் ஆனால் தாம் முழுவதும் கடவுளை மட்டுமே நம்பி இந்தியாவுடன் விளையாடுவேன் எனவும் லீ தெரிவித்தார். நான் கிரிக்கெட் வீரராக ஆகாமல் போயிருந்தால் இசைத்துறைக்கு சென்றிருப்பேன் என அவர் அப்போது நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக அவர் அப்போது குறிப்பிட்டார். தாம் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய தொடர் தோல்விகள் குறித்து விமர்சிப்பது சரியாக இருக்காது எனக்கூறிய அவர் இருப்பினும் இங்கிலாந்து உடனான ஆஷஸ் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி முழு திறனுடன் மீண்டு வரும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...