ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோவை வ.ஊ.சி மைதானத்தில் போராட்டம்: 14 இளைஞர்கள் கைது

கோவை வ.உ.சி மைதானத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று மாலை கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வ.உ.சி மைதானத்திற்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை உடனடியாக கலைந்து செல்லும்படியும் இல்லையெனில் கைது செய்வதாக எச்சரித்தனர்.

காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்களை காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர்.

அப்போது அப்போது இளைஞர்கள் எழுந்தவுடன் அவர்களை  காவல்துறையினர்  விரட்டிச்சென்று கலைத்தனர். கலையாமல் நின்று கொண்டு இருந்த பெண்கள் உட்பட  14 பேரை காவல் துறையினர் கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனையடுத்து வ.உ.சி மைதானத்தில் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஜல்லிக்கட்டுக்காக போராடியதை போல இளைஞர்கள் நெடுவாசல், கதிராமங்கலம் விவகாரங்களுக்காக ஓன்று சேர்ந்து விடக்கூடாது என்பதால் முன் கூட்டியே காவல் துறையினர் போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...