ரூ. 2000 விற்க முயன்ற குழந்தை மீட்பு- தாயிடம் குழந்தை நல குழு விசாரணை


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தி (35). கோவை தடாகம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை குழந்தை இல்லாத ஒரு தம்பதியினருக்கு 2000 ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளார்.



குழந்தையை வாங்க இருந்த தம்பதியினருக்கு சில சந்தேகங்கள் எழுந்ததால் இது குறித்து உக்கடம் பகுதியில் உள்ள சைல் லைன் அமைப்பினரிடம் தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் ஆய்வாளர் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு அவ்வமைப்பினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து தடாகம் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து ஆனந்தியிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் ஆகாமலேயே தவறான தொடர்பால் பிறந்த குழந்தை என்பதால் விற்க முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிறந்த மற்றொரு குழந்தையை சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக விசாரணையில் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல குழுவினர் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 2000 ரூபாய்க்கு குழந்தையை விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...