திருப்பூரில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 22ம் தேதியன்று (நாளை) சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 

இவ்விழாவினையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரு வார காலமாக பள்ளி மாணவ மாணவியர்களிடையே பல்வேறு கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் விளையாட்டு போட்டிகளும் ஊராட்சிப் பகுதிகளில் எம்.ஜி.ஆர் பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்பபடங்களும் கிராமங்களில் மின்னணுத் திரை மூலம் திரையிடப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெறும் இந்த நூற்றாண்டு விழாவிற்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமை வகிக்கவுள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கவுள்ளார். மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை சிறப்புரை ஆற்றவுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரையாற்றுவார்.

மேலும், விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி, புதுடெல்லி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குவார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதன் வரவேற்புரையாற்ற உள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நன்றியுரையாற்றுவார்.

இதனைத்தொடர்ந்து, இந்த நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பிற்பகல் 3 மணியளவில், விழா மேடையில் எம்.ஜி.ஆர் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...