தம்பதிகளுக்கு உடல்பருமன் கருவுறுவதைத் தாமதமாக்கும் - நோவா ஃபெர்டிலிட்டி சென்டரின் ஆலோசகர் டாக்டர். லதா தகவல்

ராமன் (34), அவரது மனைவி சங்கீதா (30) இருவரும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பெறுவது குறித்து திட்டமிட்டனர். ஆறு மாதம் தாம்பத்தியத்திற்குப் பிறகும் கருத்தரிக்காதது குறித்து வியப்படைந்தனர். சங்கீதாவின் நெருங்கிய தோழி கருத்தரிப்பு சிகிச்சை நிபுணரைக் கலந்து ஆலோசிக்கும்படி ஆலோசனை கூறினார். அதன்படி நோவா ஐவிஐ ஃபெர்டிலி சென்டரின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் லதாவிடம் சென்று ஆலோசனை கேட்டனர். ராமனின் உடலில் கொழுமியம் அளவு பரிசோதிக்கப்பட்டது. அவர் ராமனும், சங்கீதாவும் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். அதையடுத்து சங்கீதாவின் உடல் சாதாரண நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால், ராமனின் விந்தணு எண்ணிக்கையும் அதன் திறனும் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதற்கு அவரது உடல் பருமன் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது.



ராமன், சங்கீதா ஆகியோரைப் போல பல பேருக்கு இந்த சிக்கல் கோயம்புத்தூரிலும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இந்தக் காலத்தில் பரவலாக இருக்கிறது. 2014-15 ஆம் ஆண்டுக்கான நான்காவது தேசிய குடும்பநல புள்ளிவிவரத்தின்படி உடல் பருமன் அளவு ஆண்கள், தமிழ்நாட்டில் பெண்களிடம் கடந்த பத்தாண்டுகளில் 10 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. அந்தப் புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் 15 முதல் 49 வயது வரையிலானோரில் 30.9 சதவீதம் பெண்களும் 28.2 சதவீதம் பெண்களும் உடல் பருமன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இது 2005-06 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 3ஆவது புள்ளி விவரத்தை விட மிகவும் அதிகமாகும். பெண்களிடையே 20.9 சதவீதமும் ஆண்களிடையே 14.5 சதவீதமும் அதிகம் காணப்படுகிறது.

கோவையில் உள்ள நோவா ஐவிஐ ஃபெர்டிலிட்டி மையத்தின் கருத்தரிப்பு ஆலோசகர் டாக்டர் வி. லதா கூறுகிறார்: “நோவா ஐவிஐ ஃபெர்டிலிடி மையத்திற்கு சிகிச்சைக்காக கடந்த ஓராண்டில் வந்தவர்களில் 30 முதல் 35 வயது வரையிலான இளம் தம்பதியரிடையே ஆண்களிடமோ பெண்களிடமோ அல்லது இருவரிடமோ உடல்பருமன் நிலை 22 சதம் இருப்பது தெரியவந்துள்ளது. உடல் நிறை குறியீட்டு அளவு 25 என்பதை விட அதிகமாக இருக்கிறது. இது கருவுறும் வாய்ப்பைக் குறைக்கிறது. மறு உற்பத்திக்கான உதவிகளின் மூலம் அது சரிசெய்யப்படுகிறது.

உடல் பருமனும் கருவுற இயலாத தன்மையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. உடல் பருமனுள்ள பெண்களிடம், அதிக எடையுள்ள பெண்களிடமும் சினைமுட்டை வளர்ச்சி வெளியேற்றுவது முறையாக நடைபெறாது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இதனால், கருவுறும் வாய்ப்புள்ள பருவத்திலேயே குழந்தைப் பேறு இயலாமல் போகிறது. உடல் பருமன் ஹார்மோன் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும், இதனால் கருவுறுதல் பாதிக்கப்படும். ஹார்மோன் பிரச்சினை கருப்பையில் இருந்து முட்டையை வெளியேற்றுவதையும் பாதிக்கும். அத்தகைய சமயத்தில் இன்சுலின் சுரப்பதையும் பாலிசிஸ்டிக் சினைப்பை நோய்க்குறியையும் பாதிக்கும். ஆண்களுக்கு உடல் பருமன் விந்தணு எண்ணிக்கை குறைய வழி வகுக்கும். ஆண்கள் சதை போட்டால் ஆண்மை இயக்குநீர் எனப்படும் ஒருவித ஹார்மோனுக்கு பாதிப்பு நேரும். விதைப்பைத் தூண்டுதல், விந்தணு உற்பத்தி ஆகியவையும் குறையும்” என்றார்.



“அப்படியே கருத்தரித்தாலும், ஹார்மோன் பிரச்சினை காரணமாகவும் இதர பிரச்சினைகளாலும் கருச்சிதைவு நேரும் அபாயம் உண்டு. அதனால், எங்களது நோயாளிகள் சத்தான ஆரோக்கியமான உணவை சாப்பிடும்படியும் முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் அறிவுறுத்துகிறோம். இதனால், ஆரோக்கியமான உடல்நிலையை அவர்கள் பெறுவர். கருத்தரிப்பதும் சுமுகமாகும். எடைக் குறைப்பு எப்போதுமே நல்லது. இது கருத்தரிப்பை அதிகரிக்கும். எந்த வயதிலும் கருத்தரிக்க இயலும். ஐயுஐ அல்லது ஐசிஎஸ்ஐ போன்ற ஐவிஎஃப்  சிகிச்சை முறைகளுக்கு முன்பாக எடையைக் குறைக்கும்படி ஆலோசனை கூறுகிறோம். அவர்கள் மட்டுமின்றி அவர்களது குழந்தைகளும் அதிக எடையின்றி வளர்வதை உறுதி செய்யும்படி அறிவுறுத்துகிறோம்” என்றார் டாக்டர் லதா.

எடையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வது இதர ஆபத்தான நோய்களைத் தவிர்ப்பது மட்டுமின்றி, கருத்தரிக்கும் திறனையும் பாதுக்காக்கும். எனவே, ஆண்களும் பெண்களும் சில குறிப்பிட்ட முறையான உடற்பயிர்சியுடன் சமவிகிதமான உணவை எடுத்துக் கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது அவசியம். அதுதான் ஆரோக்கியமான பெற்றோர்களாக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...