கோவை மாநகராட்சியுடன் (GIZ) என்கிற ஜெர்மன் அரசு நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்த முதற்கட்ட கலந்தாலோசனைக் கூட்டம் இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா தலைமையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டம் இந்திய அரசு - ஜெர்மன் அரசு நிறுவனம் (GIZ) இணைந்து தமிழ் நாட்டில் கோவையிலும், ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரிலும், கேரள மாநிலத்தில் கொச்சினிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனடிப்படையில் நகர்புற போக்குவரத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து நடைபெறும் முதற்கட்ட கலந்தாலோசனை கூட்டம் ஆகும்.
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது. அவை கோவை மாநகரில் நாளுக்கு நாள் ஏற்படும் வாகன பெருக்கத்தை மனதில் கொண்டு சாலை விரிவாக்கம் - ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
வாகனங்கள் நிறுத்துமிடம், மாசு கட்டுப்பாடு, ஒலி மாசு கட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சாலை விபத்துகள் தவிர்ப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதசாரிக்குரிய நடைபாதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், சைக்கிள் பாதை அமைத்தல் ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இத்திட்ட வரைவு உருவாக்குவதற்கு பணி சார்ந்த துறைகளுடன் நன்கு கலந்தாலோசித்து முடிவெடுக்க தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா ஹரி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, போக்குவரத்துத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், (GIZ) ஜெர்மன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் இந்திய அரசு - ஜெர்மன் அரசு நிறுவனம் (GIZ) இணைந்து தமிழ் நாட்டில் கோவையிலும், ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரிலும், கேரள மாநிலத்தில் கொச்சினிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனடிப்படையில் நகர்புற போக்குவரத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து நடைபெறும் முதற்கட்ட கலந்தாலோசனை கூட்டம் ஆகும்.
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது. அவை கோவை மாநகரில் நாளுக்கு நாள் ஏற்படும் வாகன பெருக்கத்தை மனதில் கொண்டு சாலை விரிவாக்கம் - ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
வாகனங்கள் நிறுத்துமிடம், மாசு கட்டுப்பாடு, ஒலி மாசு கட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சாலை விபத்துகள் தவிர்ப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதசாரிக்குரிய நடைபாதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், சைக்கிள் பாதை அமைத்தல் ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இத்திட்ட வரைவு உருவாக்குவதற்கு பணி சார்ந்த துறைகளுடன் நன்கு கலந்தாலோசித்து முடிவெடுக்க தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா ஹரி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, போக்குவரத்துத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், (GIZ) ஜெர்மன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.