கோவையில் உள்ள 'பைக் பார்க்கிங்'-களில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு, நீண்டகாலமாக உரிமை கோராமல் நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்படி, பீளமேடு போலீசார் இன்று ஃபன்மால் வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அங்கு 17 இருசக்கர வாகனங்கள் நீண்டகாலமாக கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பார்க்கிங்கில் இருந்து 4 வாகனங்களை சாய்பாபாகாலனி போலீசார் பறிமுதல் செய்தனர்.
நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்ட இந்த வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு, அவை திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு, நீண்டகாலமாக உரிமை கோராமல் நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்படி, பீளமேடு போலீசார் இன்று ஃபன்மால் வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அங்கு 17 இருசக்கர வாகனங்கள் நீண்டகாலமாக கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பார்க்கிங்கில் இருந்து 4 வாகனங்களை சாய்பாபாகாலனி போலீசார் பறிமுதல் செய்தனர்.
நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்ட இந்த வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு, அவை திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.