தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் சமூக வீரோதிகள் கலந்துள்ளனர்- தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டி

மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் கலந்திருப்பதாகவும், எனவே தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டியவையாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தில் நடைபெறும் மறைந்த பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் இன்று கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னாள் என்ன சேவை செய்தார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளார்கள். பல வருடங்களாகவே சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்ததாலேயே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் போது தாங்கள் ஆதரவு அளித்தோம். தற்பொழுது இவ்வளவு பேசும் கமல் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு எவ்வளவோ பிரச்சனைகள் இருந்த போது எந்த கருத்தும் கூறாதது ஏன் ?.

திரைப்படத்தை போல் நினைத்துக்கொண்டு ஒரு நாள் முதலமைச்சர் ஆகலாம் என்ற கதை அரசியலில் இல்லை. அரசியல் என்பது ட்விட்டர் தளத்தில் இன்றி மக்களுடன் நிஜ தளத்தில் இருப்பது.

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டியவையாக உள்ளது. மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் கலந்துள்ளனர். சமூக பாதுகாப்பிற்காக ஒருவர் கைது செய்யப்படும் போது உண்மை தன்மையை அறியாமல் கருத்து கூறும் பழக்கம் எதிர்க் கட்சிகளிடையே உள்ளது. கர்நாடக சிறைத்துறையில் டி.ஐ.ஜி ரூபா மாற்றப்பட்டது குறித்து தீர விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...