கோவையில் புரூக்ஃபீல்ட்ஸ் மற்றும் பன் மால் என்னும் பன்னடுக்கு வர்த்தக மால்கள் செயல்பட்டு வரும் நிலையில் புரோஜோன் என்ற பெயரில் சரவணம்பட்டி பகுதியில் புதிய மால் விரைவில் துவங்க உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சரவணம்பட்டியில் உள்ள அந்த மாலில் இன்று நடைபெற்றது.

அப்போது, செய்தியாளர்களிடம் அதன் உரிமையாளர் நிகில் சதுர்வேதி பேசுகையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎண்டியூ நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதல் மால் அவுரங்காபாத்தில் துவங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படும் கோவையில் மிகப்பெரிய வணிக வளாகத்தை துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

தொழில் நகரமான கோவையில் மக்கள் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை இம்மால் ஊக்கப்படுத்தும். இது நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்த வணிகவளாகம் ஒரே நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வணிகவளாகத்தில் 9 ஐனாக்ஸ் வகை திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக புகையை வெளியேற்றும் வகையில் புகை வெளியேற்றும் இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


அப்போது, செய்தியாளர்களிடம் அதன் உரிமையாளர் நிகில் சதுர்வேதி பேசுகையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎண்டியூ நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதல் மால் அவுரங்காபாத்தில் துவங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படும் கோவையில் மிகப்பெரிய வணிக வளாகத்தை துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

தொழில் நகரமான கோவையில் மக்கள் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை இம்மால் ஊக்கப்படுத்தும். இது நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்த வணிகவளாகம் ஒரே நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வணிகவளாகத்தில் 9 ஐனாக்ஸ் வகை திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக புகையை வெளியேற்றும் வகையில் புகை வெளியேற்றும் இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
