கோவையில் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் புதிய பொழுதுபோக்கு மால் விரைவில் துவங்க உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் புரூக்ஃபீல்ட்ஸ் மற்றும் பன் மால் என்னும் பன்னடுக்கு வர்த்தக மால்கள் செயல்பட்டு வரும் நிலையில் புரோஜோன் என்ற பெயரில் சரவணம்பட்டி பகுதியில் புதிய மால் விரைவில் துவங்க உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சரவணம்பட்டியில் உள்ள அந்த மாலில் இன்று நடைபெற்றது.



அப்போது, செய்தியாளர்களிடம் அதன் உரிமையாளர் நிகில் சதுர்வேதி பேசுகையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎண்டியூ நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதல் மால் அவுரங்காபாத்தில் துவங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படும் கோவையில் மிகப்பெரிய வணிக வளாகத்தை துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 



தொழில் நகரமான கோவையில் மக்கள் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை இம்மால் ஊக்கப்படுத்தும். இது நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்த வணிகவளாகம் ஒரே நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 



5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வணிகவளாகத்தில் 9 ஐனாக்ஸ் வகை திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக புகையை வெளியேற்றும் வகையில் புகை வெளியேற்றும் இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.



Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...