கோவையில் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் புதிய பொழுதுபோக்கு மால் விரைவில் துவங்க உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் புரூக்ஃபீல்ட்ஸ் மற்றும் பன் மால் என்னும் பன்னடுக்கு வர்த்தக மால்கள் செயல்பட்டு வரும் நிலையில் புரோஜோன் என்ற பெயரில் சரவணம்பட்டி பகுதியில் புதிய மால் விரைவில் துவங்க உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சரவணம்பட்டியில் உள்ள அந்த மாலில் இன்று நடைபெற்றது.



அப்போது, செய்தியாளர்களிடம் அதன் உரிமையாளர் நிகில் சதுர்வேதி பேசுகையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎண்டியூ நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதல் மால் அவுரங்காபாத்தில் துவங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படும் கோவையில் மிகப்பெரிய வணிக வளாகத்தை துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 



தொழில் நகரமான கோவையில் மக்கள் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை இம்மால் ஊக்கப்படுத்தும். இது நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்த வணிகவளாகம் ஒரே நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 



5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வணிகவளாகத்தில் 9 ஐனாக்ஸ் வகை திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக புகையை வெளியேற்றும் வகையில் புகை வெளியேற்றும் இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...