கோடநாடு கொள்ளை வழக்கில் கைதான 5 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கும் திட்டத்துடன் நுழைந்த மர்மநபர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இதில் முதல் குற்றவாளியான கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கைதான 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், குற்றவாளிகள் 10 பேரில் தீபு, உதயகுமார், சதீஷன், குட்டி பிஜின், மனோஜ் உள்ளிட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கும் திட்டத்துடன் நுழைந்த மர்மநபர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இதில் முதல் குற்றவாளியான கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கைதான 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், குற்றவாளிகள் 10 பேரில் தீபு, உதயகுமார், சதீஷன், குட்டி பிஜின், மனோஜ் உள்ளிட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.