கோவை மாவட்ட மக்ளின் நீண்ட நாள் கோரிக்கையான மெட்ரோ ரயில் சேவையினை கோவையில் துவங்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்தான அறிவிப்பை இன்று சென்னையில் நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதுகுறித்து 110-வது விதியின் கீழ் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கையில், கோவையில் மெட்ரோ ரயில் சேவை துவங்க கோவை மாவட்டத்தில் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதுகுறித்தான விரிவான திட்ட அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட பின் பணிகள் துவங்கப்படும் என அறிவித்தார்.