ஜிஎஸ்டி வரி உயர்வால் லட்சக் கணக்கில் தேங்கிய நீலகிரி தேயிலைகள்


மழைகளின் இளவரசியான உதகையில் அதிகப்படியான தேயிலை உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேயிலைகள் இந்தியா முழுக்க மற்றுமின்றி உலகத்தின் பெரும்பகுதிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேயிலையும், குறிப்பாக உற்பத்தி நிறுவனங்களில் மட்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோ தேயிலை பயனற்ற நிலையில் தேங்கிக் கிடக்கின்றன.



தற்போது நீலகிரியில் தேங்கிக் கிடக்கும் தேயிலைகளின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் இருக்கும் என நீலகிரி தேயிலை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் ஜூலை 1ம் தேதியன்று உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியே என இச்சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேயிலை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் கூறுகையில், நீலகிரியில் குறிப்பாக குன்னூர் பகுதியிலேயே தேயிலை விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இத்தொழிலை நம்பி ஏராளமான இடைத்தரகர்கள் உள்ளனர். இவர்களுக்கு தேயிலை ஏற்றுமதியின் போது குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கும். ஆனால், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் இடைத்தரகர்களுக்கு எதன் அடிப்படையில் கமிஷன் தொகை தருவது என குழப்பம் நீடித்து வருகிறது.



இவ்வாறு உதகையில் தேயிலைத் தொழிலை நம்பியுள்ள அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜூலை 21ம் தேதி முதல் தேயிலைச் செடியில் இருந்து புதிதாக தேயிலை பறிக்கும் பணி நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இத்தொழிலை நம்பியுள்ள நீலகிரி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...